search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வாலிபர் போக்சோவில் கைது"

    • மாணவி வீட்டில் தனியாக இருந்தபோது அவரை அழைத்துச் சென்ற செல்வம் பலவந்தமாக கற்பழிக்க முயன்றார்.
    • போலீசார் செல்வம் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஆண்டிபட்டி:

    தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள ஏத்தகோவில் பகுதியைச் சேர்ந்தவர் செல்வம் (வயது 22). கூலித் தொழிலாளி. இவர் அதே பகுதியைச் சேர்ந்த 15 வயதுடைய பள்ளி மாணவியை காதலிப்பதாக கூறி பழகி வந்துள்ளார்.

    நேற்று மாணவி வீட்டில் தனியாக இருந்தபோது அவரை அழைத்துச் சென்ற செல்வம் பலவந்தமாக கற்பழிக்க முயன்றார். இதனால் அதிர்ச்சியடைந்த மாணவி இது குறித்து தனது பெற்றோரிடம் கூறினார்.

    சிறுமியின் தந்தை ஆண்டிபட்டி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார் செல்வம் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • இருவரையும் மீட்டு பாலக்கோடு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
    • போலீசார் போக்சோவில் முனியப்பனை கைது செய்தனர். மாணவி காப்பகத்தில் சேர்க்கப்பட்டார்.

    காரிமங்கலம்,

    தருமபுரி மாவட்டம், காரிமங்கலம் அடுத்த அனுமந்தபுரத்தை சேர்ந்தவர் 17 வயது மாணவி. இவர் அங்குள்ள அரசு பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார். கடந்த 5-ந் தேதி வீட்டை விட்டு சென்ற மாணவி நீண்ட நேரம் ஆகியும் வீடு திரும்பவில்லை. இதனால் அவரை குடும்பத்தினர் பல இடங்களில் தேடியுள்ளனர். ஆனால் எங்கு தேடியும் அவர் கிடைக்கவில்லை.

    இது குறித்து மாணவியின் பெற்றோர் காரிமங்கலம் போலீசில் எனது மகளை அதே பகுதியைச் சேர்ந்த முனியப்பன் (வயது23) என்பவர் கடத்திச் சென்று இருக்கலாம் என புகார் செய்தார்.

    அதன்பேரில் வழக்கு பதிவு செய்து போலீஸ் இன்ஸ்பெக்டர் வெங்கட்ராமன் தலைமையில் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு இருவரையும் மீட்டு பாலக்கோடு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

    இதை தொடர்ந்து மாணவியை கடத்தியதாக வாலிபர் முனியப்பனை இன்ஸ்பெக்டர் வீரம்மாள் மற்றும் போலீசார் போக்சோவில் கைது செய்தனர். மாணவி காப்பகத்தில் சேர்க்கப்பட்டார்.

    • 14 வயது சிறுமியிடம் காதலிப்பதாக கூறி கற்பழித்த வாலிபர் போக்சோவில் கைது செய்யப்பட்டார்.
    • பாதிக்கப்பட்ட சிறுமியை காப்பகத்தில் சேர்த்து சிகிச்சை அளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

    நிலக்கோட்டை:

    நிலக்கோட்டை அருகே உள்ள விளாம்பட்டிையச் சேர்ந்தவர் கருப்பையா (வயது 24). கூலித் தொழிலாளி. இவர் அதே பகுதியைச் சேர்ந்த 14 வயது சிறுமியிடம் காதலிப்பதாக கூறி பழகி வந்துள்ளார்.

    பின்னர் அவரை தனியாக சந்தித்து உல்லாசமாக இருந்துள்ளார். இதில் சிறுமி கர்ப்பமானார். இந்த விபரம் அவரது பெற்றோருக்கு தெரியவரவே மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்துக்கு புகார் தெரிவித்தனர்.

    குழந்தை பாதுகாப்பு அதிகாரி ஷியாமளா இது குறித்து விளாம்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் கருப்பையா மீது போக்சோ சட்டத்தின் கீழ் இன்ஸ்பெக்டர் வனிதா வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தார்.

    பாதிக்கப்பட்ட சிறுமியை காப்பகத்தில் சேர்த்து சிகிச்சை அளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

    • வாலிபர் 17 வயதுடையை தனது உறவுக்கார பெண்ணை திருமணம் செய்து கொண்டார்.
    • தகவல் அறிந்த போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    குள்ளனம்பட்டி:

    திண்டுக்கல் மாவட்டம் சாணார்பட்டி அருகே உள்ள வீரசின்னம்பட்டியைச் சேர்ந்த மாரியப்பன் மகன் ராஜா (வயது 35). இவர் கடந்த வருடம் 17 வயதுடையை தனது உறவுக்கார பெண்ணை திருமணம் செய்து கொண்டார்.

    தற்போது அவர் கர்ப்பிணியான நிலையில் திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அவரது வயதை சரிபார்த்தபோது மைனர் பெண்ணுக்கு திருமணம் நடந்தது உறுதி செய்யப்பட்டது.

    இதனைத் தொடர்ந்து சமூக நலத்துறை அதிகாரிகள் சாணார்பட்டி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சப்-இன்ஸ்பெக்டர் ஜான்சன்ஜெயக்குமார், மகளிர் ஆய்வாளர் திலகா ஆகியோர் விசாரணை நடத்தினர்.

    இதனைத் தொடர்ந்து ராஜாவை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    • 15 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக வாலிபர் மீது புகார் அளிக்கப்பட்டது.
    • போலீசார் வாலிபரை போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குபதிவு செய்து கைது செய்ததுடன் அவரை சிறையில் அடைத்தனர்.

    திண்டுக்கல்:

    திண்டுக்கல் மாவட்டம் கன்னிவாடி அருகில் உள்ள கோனூரை சேர்ந்த சென்ராயன் மகன் சசிக்குமார்(22).

    இவர் அதேபகுதியை சேர்ந்த 15 வயது சிறுமியை காதலிப்பதாக கூறி தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார். இதுகுறித்து சிறுமி தனது பெற்றோரிடம் கூறினார். இதனையடுத்து ஒட்டன்சத்திரம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.

    போலீசார் சசிக்குமார் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குபதிவு செய்து கைது செய்ததுடன் அவரை சிறையில் அடைத்தனர்.

    • சிறுமியின் உடலில் மாற்றம் ஏற்பட்டதை தொடர்ந்து, பெற்றோர் சிறுமியிடம் விசாரித்தனர்.
    • போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து ரதீசை கைது செய்தனர்.

    கூடலூர்

    பந்தலூர் பகுதியை சேர்ந்தவர் ரதீஸ் (வயது 20). இவர் 14 வயது சிறுமியை ஆசைவார்த்தை கூறி பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. இதனால் சிறுமியின் உடலில் மாற்றம் ஏற்பட்டதை தொடர்ந்து, பெற்றோர் சிறுமியிடம் விசாரித்தனர். இதில் கர்ப்பமாக இருந்தது தெரியவந்தது. இதுகுறித்து தேவாலா அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இதைதொடர்ந்து சிறுமிக்கு மருத்துவ பரிசோதனை செய்த போது, 4 மாத கர்ப்பமாக இருந்தது தெரியவந்தது. இதையடுத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) சித்ரா மற்றும் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து ரதீசை கைது செய்தனர்.

    • சிறுமியை கடத்திய வாலிபர் போலீசில் சிக்கினார்.
    • ஆனந்தை போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.

    நல்லம்பள்ளி,

    தருமபுரி மாவட்டம், இண்டூர் அருகேயுள்ள கும்பலவாடி கிராமத்தை சேர்ந்தவர் எல்லப்பன். இவரது 18 வயது மகள் வீட்டில் இருந்து மாயமானார். இதனால் அவரை உறவினர் வீடு உள்பட பல்வேறு இடங்களில் தேடி பார்த்தும் கிடைக்கவில்லை.

    இது குறித்து எல்லப்பன் இண்டூர் போலீசில் எனது மகளை அதே ஊரை சேர்ந்த ஆனந்த் என்ற வாலிபர் கடத்தி சென்றிருக்கலாம் என்று புகார் கொடுத்தார்.

    அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதையடுத்து கிரஷர் தொழிலாளியான ஆனந்தை போலீசார் மடக்கி பிடித்தனர்.

    பின்னர் சிறுமியை மீட்ட போலீசார் ஆனந்தை போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.

    • 16-ந்தேதி அன்று மாணவி வீட்டை விட்டு வெளியேறி அபினேசுடன் சென்றதாக கூறப்படுகிறது.
    • அபினேஷ், மாணவி ஆகியோர் கோவையில் பதுங்கி இருப்பது தெரியவந்தது.

    மத்தூர்,

    கிருஷ்ணகிரி மாவட்டம், நாகரசம்பட்டி அடுத்துள்ள பேருஅள்ளி பகுதியை சேர்ந்தவர் 17 வயது பிளஸ்-2 மாணவி. இவருக்கும், தஞ்சை மாவட்டம், பாபநாசம் நடுத்தெரு ராமராஜபுரம் பகுதியை சேர்ந்த அபினேஷ் (வயது21) என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டது. இது நாளடைவில் காதலாக மாறியது. இருவரும் செல்போன் மூலம் காதலித்து வந்தனர்.

    இந்த நிலையில் கடந்த மாதம் 16-ந்தேதி அன்று மாணவி வீட்டை விட்டு வெளியேறி அபினேசுடன் சென்றதாக கூறப்படுகிறது.

    இது குறித்து மாணவியின் பெற்றோர் எனது மகளை திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி அபினேஷ் என்பவர் கடத்தி சென்றுள்ளதாக நாகரசம்பட்டி போலீசில் புகார் கொடுத்தனர். அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    அப்போது அபினேஷ், மாணவி ஆகியோர் கோவையில் பதுங்கி இருப்பது தெரியவந்தது. உடனே அங்கு விரைந்து சென்ற போலீசார் அவர்கள் இருவரையும் அழைத்து வந்தனர். மாணவிக்கு அறிவுரை வழங்கி போலீசார் அவரது பெற்றோரிடம் அனுப்பி வைத்தனர்.

    இது தொடர்பாக போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குபதிவு செய்து அபினேஷை கைது செய்தனர். கைதான அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி கிருஷ்ணகிரி கிளை சிறையில் அடைத்தனர்.

    • மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்து செல்போனில் படம் பிடித்து மிரட்டிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
    • மற்றொரு வாலிபரை போலீசார் தேடி வருகின்றனர்.

    திண்டுக்கல்:

    திண்டுக்கல் அடுத்துள்ள சென்னமநாயக்கன்பட்டியை சேர்ந்த முருகேசன் மகன் அஜித்(24). இவருக்கும் அதேபகுதியை சேர்ந்த 17 வயது மாணவி ஒருவருக்கும் பழக்கம் ஏற்பட்டது. மாணவியை தனிமையில் அழைத்து பாலியல் தொந்தரவு செய்து அதனை தனது செல்போனில் படம் பிடித்தார்.

    இதேபோல தாடிக்கொம்பு அருகில் உள்ள காமாட்சிபுரத்தை சேர்ந்த தங்கராஜ்(26) என்பவரும் அந்த மாணவியை தனிமையில் அழைத்து பாலியல் தொந்தரவு கொடுத்து அதனை செல்போனில் பதிவு செய்தார். இந்த காட்சிகளை காட்டி அடிக்கடி மாணவியை அழைத்து இருவரும் பாலியல் தொந்தரவு செய்து வந்துள்ளனர்.

    இதுகுறித்து மாணவி தாடிக்கொம்பு போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் அஜித்தை கைது செய்தனர். அவரது செல்போனில் ஏராளமான ஆபாச காட்சிகள் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

    மேலும் தலைமறைவான தங்கராஜை தேடி வருகின்றனர்.

    • மாணவியை கையை பிடித்து இழுத்து அத்துமீறலில் ஈடுபட்ட சஞ்சய் அந்த பெண்ணின் முகத்தில் ஆசிட் வீசி விடுவேன் என்றும் மிரட்டியுள்ளார்.
    • நேற்று சஞ்சய் போலீசில் சிக்கினார்.

    தருமபுரி,

    தருமபுரி அடுத்த நல்லம்பள்ளி அருகேயுள்ள சிலட்டி பகுதியை சேர்ந்தவர் முனுசாமி. இவரது மகன் சஞ்சய்(23).

    இவர் அதே பகுதியை சேர்ந்த ஒரு மாணவியை ஒருதலைப்பட்சமாக காதலித்து வந்துள்ளார்.

    கடந்த ஏப்ரல் மாதம் கெங்கலாபுரம் பஸ் நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்த மாணவியை கையை பிடித்து இழுத்து அத்துமீறலில் ஈடுபட்ட சஞ்சய் அந்த பெண்ணின் முகத்தில் ஆசிட் வீசி விடுவேன் என்றும் மிரட்டியுள்ளார்.

    இந்த சம்பவம் குறித்து போலீசில் புகார் தரப்பட்ட நிலையில் சஞ்சய் தலைமறைவாகிவிட்டார். இந்நிலையில் நேற்று சஞ்சய் போலீசில் சிக்கினார்.

    அவரை போக்ஸோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.

    • பள்ளி மாணவியிடம் பழகி அவரை திருமணம் செய்துகொள்வதாக கூறி பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார்.
    • ராஜேந்திரனை போக்சோவில் சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    மத்தூர்,

    கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் அருகேயுள்ள திப்பம்பட்டியை சேர்ந்தவர் செல்வம். இவரது மகன் ராஜேந்திரன் (வயது29). இவர் அதே பகுதியை சேர்ந்த ஒரு பள்ளி மாணவியிடம் பழகி அவரை திருமணம் செய்துகொள்வதாக கூறி பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார்.

    இது பற்றி அந்த அந்த மாணவியின் பெற்றோர் மத்தூர் போலீசில் புகார் கொடுத்தனர். இந்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து ராஜேந்திரனை போக்ஸோ சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    • 17 வயது சிறுமியை காதலித்து பலவந்தப்படுத்தி பலாத்காரம் செய்த வாலிபர்.
    • போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    குள்ளனம்பட்டி:

    திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே உள்ள செந்துறையைச் சேர்ந்தவர் வெங்கடேசன் (வயது 23).

    இவர் அதே பகுதியில் பத்திர எழுத்தராக வேலை பார்த்து வந்தார். அப்போது அப்பகுதியைச் சேர்ந்த 8ம் வகுப்பு படித்து விட்டு வீட்டில் இருந்த 17 வயது சிறுமியுடன் பழகி வந்தார்.

    அவரை காதலிப்பதாக கூறி உல்லாசமாக இருந்துள்ளார். இதில் மாணவி கர்ப்பமானார். அவர் உடல்நிலை மாறுதலடைந்ததைக் கண்டு அவரது பெற்றோர் திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர்.

    அப்போது அவர் 3 மாத கர்ப்பிணியாக இருந்தது தெரிய வந்தது. இதனையடுத்து நடந்த விபரங்களை கேட்டபோது அவர் வெங்கடேசன் தன்னை பலவந்தப்படுத்தி பலாத்காரம் செய்ததாக தெரிவித்தார்.

    இது குறித்து நத்தம் போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இன்ஸ்பெக்டர் ராஜ சேகர், மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரத்தின குமாரி ஆகியோர் வழக்குபதிவு செய்து வெங்கடேசனை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    ×